Tuesday, March 16, 2010

கோடை காலம்



நீண்ட நாட்களுக்கு பிறகு
அவள் இல்லாத நாளில்
உன்னை சந்திக்கிறேன்
எரிந்து போன காயங்களை காட்டி
எல்லைகள் வரவேற்கின்றன
எங்கே அந்த புல்வெளிகள்
அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள்
உன் அடர்ந்த மரங்களின் இலைகளை காணவில்லை
இப்பொழுது என் பசிக்கு
உன்னிடம் பழங்கள் இல்லை
நீரோடையில் நான் தொலைத்த நாணயத்தை
வெயில் மினுங்க
கண்டெடுத்துவிடுவது ஆச்சரியம்தான்
என் பெயர் பொறித்த தடிமரவட்டை
உதிர்ந்து விழுகிறது என்னோடு
மலர்கள் அற்று நிர்வாணம்
கொண்டிருக்கிறது காப்பிசரிவுகள்
காதலிக்கு கொடுக்க ஒரு காட்டு மலரும்
இல்லாதது எவ்வளவு துக்ககரமானது
இரை தேடிச் சென்ற பட்சிகள்
தொலைந்து போய் விட்டதாய்
இருக்கிறது உன் மௌனம்
இருப்பினும் பச்சை கூம்புகள் கொண்ட
சோற்று கற்றாழைகள்
வளர்ந்திருப்பது நல்ல விசயம்தான்
துயரம் பெருகும் கோடைகாலத்தில்
நான் இங்கு வந்திருக்ககூடாததுதான்

4 comments:

  1. anna,very nice poem .kaathal thathumbi vazhikiradhu "ezhavadhu kadavulai"vida indha kavidhaye enakku migavum pidiththirukkiradhu "எரிந்து போன காயங்களை காட்டி
    எல்லைகள் வரவேற்கின்றன"

    "இரை தேடிச் சென்ற பட்சிகள்
    தொலைந்து போய் விட்டதாய்
    இருக்கிறது உன் மௌனம்"

    very nicena

    ReplyDelete
  2. தனிமையில், சந்தித்த இடங்களில் போய் சுவாசிப்பது சுகம் தான். வேதனையான சுகம்

    ReplyDelete
  3. nanri thozi thenammai...

    day mani unakku nanri thevaiyanu theriyala,
    irunthaalum nanrida...

    வேதனையான சுகம் thaan thozi nanrigal pala...

    anbudan
    ursularagav

    ReplyDelete