Tuesday, March 16, 2010

அறிதல் நிரந்தரம்




துப்பாக்கியில் இருந்து விடுபட்ட
குண்டின் வேகம் போல
ஒரே நொடியில் மரணம் ஏற்படுவதை
என்னால் ஒத்துக் கொள்ள முடியாது
ஆகாயத்தில் பருந்துகளின் நிழலை உணர்ந்து
வளையிலிருந்து வெளிவர முயலும்
எலியின் பயம் போன்றதொரு கணம்
அல்லது முதன்முறையாக இரை தேடிச்செல்லும்
சிறிய பட்சியைப் போல
ஒரு சாலையை கடக்கும் போதோ
நீந்தும் போதோ
மரணத்தை மெல்ல உணர வேண்டும்
திடுக்கிட வைக்கும் இசைப் பேரொலியின்
போது இதயம் நின்று விடுமாயின்
மரணத்தை ஏன் அறிய வேண்டும்
ஒவ்வொரு கணமும் ஏன் என்பதுதான் கேள்வி

No comments:

Post a Comment