Saturday, March 6, 2010

மிருகங்களும் கானல் நீரும்



தன் மூதாதையர்களை கொல்லப்பிறந்தவன்
என்றொரு குரல் பின் தொடர்கிறது
தன் கலவியின் போது
கல்லெறிந்ததாக சீறும் ஒரு நாயின் முன்
நான் நின்றிருந்தேன்
மந்தையில் நடக்கும் ஆடு ஒன்று
விலகி வந்து என் இடுப்பில்
தன் கொம்பால் தாக்கி சென்றது
தலைக்கு மேல் காகங்கள்
கொத்திக்கொண்டே இருக்கின்றன
ஓட முயன்ற என்னை
கானகத்தின் மிருகங்கள் ஒன்றுகூடி துரத்துகின்றன
நாயிருந்த இடத்தில்
ஒரு கொழுத்த சிங்கம் என்னை
ஏறிட்டுப்பார்த்து கொட்டாவி விட்டது
மரணம் ஒரு கணம்
கானகம் பொட்டலானது
வெட்ட வெளியில் புகைத்துக்கொண்டிருக்கிறேன்
கானல் நீர் எழும்பிக் கொண்டிருக்கிறது

2 comments:

  1. kutravunarchi nilalena pinthodara oru kodunkanavil irundhu meendadhaai adhirchiyil uraiyum kanam. arumai.

    "வெட்ட வெளியில் புகைத்துக்கொண்டிருக்கிறேன்
    கானல் நீர் எழும்பிக் கொண்டிருக்கிறது"
    migundha adhirchiyai erpaduththuginrana ivvarigal

    ReplyDelete