Saturday, March 6, 2010

சகிக்க முடியாத ஆண்


ஒரு கவிஞனுமான எனது தந்தை
சமூகம் விரும்பாதவனாகவும்
தன் சுதந்திரத்தை அடிமை படுத்தும்
பெண்களுக்கு கணவனாக இருப்பதாகவும்
தன் போதை நாட்களிடையே உளறுகிறார்
வெளியெங்கும் சொல்லாடல்களுக்கான
நபர்களை தேடிக்கொண்டிருக்குமவர்
மதுவோடு இறைச்சியையும்
காலி செய்தவாறு சில கவிதைகள்
கிடைத்த நாளில் மகிழ்வுடன் எங்களிலிருந்து
வெளியேறுகிறார்
நள்ளிரவு விடுதிகளில் கைவிட்டுச் செல்பவரை
தனது புரவலர் என அறிமுகப்படுத்தும்
அவரை புரிந்து கொண்ட பெண்ணொருத்தி
மனைவியாக கிடைக்க வழியற்று
காலம் கடந்து போய்விட்டதாய் புலம்பும் போது
யாராலும் சகிக்க முடியாது
இச்சைகளை கவிதையில் புணர்ந்து கொண்டு
ஏறக்குறைய பரிநிர்வாணமாகிவிடுகிறார்
சில சமயம் தன் கவிதைகளுக்கு சில நாணயங்களை
பரிசாக கொண்டு இருப்பிடம் திரும்பும் அவர்
நள்ளிரவில் என்னை எழுப்பி நடனமாடுவார்
தன்னை ஒரு தந்தை இல்லையென்றும்
உன் தாயின் தோழன் அல்லது காதலன் என்றும்
பொய் சொல்லுவார்
கன்றாவிதான் ஒரு கவிஞன் தந்தையாக இருப்பது

3 comments:

  1. மறக்கவே முடியாத உன் கவிதை இது ,ஊர்சுலா!

    ReplyDelete
  2. naan maerkooriyadhai aamodhikkiren

    ReplyDelete
  3. nanri muthuvel anna...

    manikkum nanri...

    ReplyDelete