Monday, February 8, 2010


காணமற்போன சத்யா


பெருத்த மரத்திற்க்கடியில்தான்
சத்யா காணாமல் போயிருந்தாள்
என்விரல் பற்றிதான்
அமர்ந்திருந்தாள்
எதிரே சிறிய நீரோடையும் இருந்தது
சிறிய பாம்பொன்றையும்
காண்பித்தவளும் அவள்தான்
இதழ் உதிர்ந்த மலரை நீட்டியதும்
கடவுளை அருகழைத்து
முரட்டுக் காதலையும் தெரிவித்தாள்
தொலைந்த கணம்
அறியமுடியவில்லை
இதோ
மரத்தின் பின்னால்
முகம்காட்டி மறையும் ஒருத்தியை
சத்யாதான் என்று உறுதிபட
உணரமுடியாதெனினும்
ஊர்ந்தொடும் பாம்பின் சரசரப்பை உணரமுடிகிறது

No comments:

Post a Comment