Monday, June 3, 2013

தானியம் சலிக்கும் இயந்திரம்


அதுவொரு
முல்லைப் பெரும்பொழுதின் அதிகாலை
மதுவினூடாக நடைபாதையில்
கிள்ளிச்செல்லும் சாலையோரச் செடியின்
ஒற்றையிலை நிறமிழக்கத் தொடங்குகிறது
வரலாற்றிலிருந்து பெண்களை
தவறவிட்ட நாம்தான் சிலசமயம்
மொழிகளுக்குள் புதையுண்ட
பழஞ்சொற்களை தேடுபவராகவும் இருக்கிறோம்
ஐந்து நிலங்களோடு அதன் அற்புதங்களையும்
புணர்சியினூடாக அவளிடம்
அதீத  முத்தங்களையும் நிகழ்த்தும் பொழுது 
தானியம் சலிக்கும் இயந்திரமென
ஒவ்வொரு புனரச்சிகளையும்
சலித்துக்கொண்டிருந்தாள்
இப்படித்தான்
வெண்ணீர் ஊற்றுகளுக்கிடையே
ஆரோக்கியமாக வளரும்
பசும்நீலப் பாசிகளைக் கண்டு
ஞானமுற்றவனாய் வாழ்வின் இயல்பை
அர்த்தப்படுத்தினோம் நாம்
கடைசியாக
ஒருமுறையும் கூடாத இவ்விரவில்
நிறமிழந்த இலையென திரியும் நாம்
எத்தனையாவது புத்தர்கள் நண்பா



1 comment: