Monday, May 10, 2010

மணல் வீடு மு.ஹரி கிருஷ்ணன் எனது கவிதைகள்

மு. ஹரி க்ரிஷ்ணன்னைஆசிரியராக கொண்டு இருமாத இதழாக வெளிவரும் மணல் வீடு வெளிவந்திருக்கிறது.

ஏர்வாடி , குட்டப் பட்டி அஞ்சல் , மேட்டுர் வட்டம், சேலம் மாவட்டம்-636 453

என்ற முகவரியில் இத்ழ கிடைக்கும் .

மணல் வீடில் வெளிவந்த எனது கவிதை

நானும் ராகவனும்

ஒற்றைக் கண்ணுடன்

எனதறைக்குள் திடுமென நுழைந்து

என்னை காணவந்திருப்பதாக

கூறும் இளம்பெண்ணை

உடல் பதறி அமரச் சொல்கிறேன்

அவளது முகத்தில் லேசான அரும்புகள் முளைவிட

இளம் பெண் கைவிட்ட துக்கம் தாளாமல்

இருபத்தியேழு மாத்திரைகள் விழுங்கி

மரணமடைந்த ராகவானாய் மாறத்தொடங்கினாள்

இறுகிய குரலில்

உனது பெயர் ராகவனா என்று கேட்கிறேன்

ஆம் என்பதும் போலிருந்தது

ஒற்றைக்கண்ணின் நெடுநேர முறைப்பு

பின் மௌனம் களைத்தவள்

ராகவானாய் பேசத்தொடங்கினாள்

தான் பதின் வயது இறுதியாண்டுகளிலே

மரணமடைந்து விட்டதால்

காமத்தை பற்றி அறிய முடியவில்லையென்றும்

காமத்தை அறிந்து கொள்வதற்காகவே

தான் இங்கு வந்திருப்பதாக கூறும்

அவளான அவ்விளம்பெண்

நேற்றுதான் பருவமடைதிருக்கிறாள்

ஒற்றைக்கண் ஏற்படுத்திய அச்சத்தினால்

கிளர்ச்சி ஏற்படுத்தும் ஸ்பரிசங்களையும்

உச்சகட்ட முயக்கங்களின் வகைமைகளையும்

நீள் விளக்கத்துடன் கற்றுத்தருகிறேன்

ஒற்றைக் கண்ணில்

காமம் கண்ணீராய் பெருகிவழிய

கதவிடுக்கில் சிகரெட் புகையாய் வெளியேறுகிறாள்

வெளியெங்கும்

மூன்று கண்களுடன் குழந்தை பிறந்திருப்பதாக

செய்தி பரவியிருந்தது .

நன்றி மணல் வீடு

1 comment: